ADDED : பிப் 22, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் :  மருத்துவமனை எதிரில் மயங்கி விழுந்த டைலர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லிக்குப்பம் அடுத்த குடிதாங்கி சாவடியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி, 40; டைலர். இவர் நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லை என கடலுார் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அங்கு, மருத்துவமனை எதிரில் உள்ள டீ கடை அருகில் திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
புகாரின்பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

