நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : கேரளா மாநிலம் வயநாட்டில் நிலசரிவால் பாதித்த மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் ஆலோசனையின் பேரில், கடலூர் வழக்கறிஞர் ராஜீவ் தலைமையில், 3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை சேகரித்தார்.
அதனை நேரடியாக வயநாட்டுக்கு சென்று பாதித்த பழங்குடியின மக்களுக்கு வழங்கினார். மாநில துணை செயலாளர் மணி, நெல்லிக்குப்பத்தை சேர்ந்த அம்பேத், கிருஷ்ணா, சதாம், கபிலன், பிரபு, தென்னவன், நிசாந்த் ஆகியோரும் உடனிருந்து நிவாரண பொருட்களை வழங்கினர்.

