/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
/
முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 06, 2024 05:07 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், ஆங்கிலதுறை இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
துறை தலைவர் பசுபதி முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் வளர்மதி வரவேற்றார்.
விழுப்புரம் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆங்கில துறை தலைவர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில், அனைத்து துறை பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், முதலாமாண்டு மாணவர்களை, பூங்கொத்து மற்றும்இனிப்பு கொடுத்து வரவேற்றனர். முடிவில், உதவி பேராசிரியர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.