sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேப்பூரில் ரேஷன் அரிசி கடத்தல் வாலிபர் கைது; இருவருக்கு வலை

/

வேப்பூரில் ரேஷன் அரிசி கடத்தல் வாலிபர் கைது; இருவருக்கு வலை

வேப்பூரில் ரேஷன் அரிசி கடத்தல் வாலிபர் கைது; இருவருக்கு வலை

வேப்பூரில் ரேஷன் அரிசி கடத்தல் வாலிபர் கைது; இருவருக்கு வலை


ADDED : ஜூன் 26, 2024 02:42 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 02:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : வேப்பூரில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசார் வேப்பூர் மெயின்ரோட்டில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினிடெம்போவை நிறுத்துமாறு கூறினர்.

டெம்போ நிற்காமல் வேகமாக சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர்.

டெம்போவில் இருந்த மூன்று பேரில் இருவர் தப்பினர். ஒருவர் மட்டுமே பிடிபட்டவர். டெம்போவில் 50 கிலோ வீதம் 34 மூட்டைகளில் இருந்து 1,700 கிலோ ரேஷன் அரிசி இருப்பதுதெரிந்தது.

விசாரணையில், பிடிபட்டவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருந்தலகுறிச்சியைச் சேர்ந்த சின்னசாமி மகன் மணிகண்டன்,26; என்பது தெரிந்தது.

இவரும் தப்பியோடிய விருத்தாசலம், நல்லுாரைச் சேர்ந்த குகன், வெங்கடேசன் ஆகியோரும் தொரவலுார், நல்லுார் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு தலைவாசல் கோழிப் பண்ணைக்கு விற்க கடத்தி வந்ததும் தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து, டெம்போவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிடியோடிய இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us