ADDED : மார் 06, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் பெரியகாலனியை சேர்ந்தவர் விக்னேஷ், 23; ஐ.டி.ஐ., முடித்துள்ள இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த 4ம் தேதி இவரது தாயார் விஜயா, ஏன் வேலைக்கு செல்லாமல் சுற்றி வருகிறாய் என திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், விஷம் குடித்தார். உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின், மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மாலை இறந்தார்.
புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.