sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருவந்திபுரம் கோவிலில் ஒரே நாளில் 120 திருமணங்கள்

/

திருவந்திபுரம் கோவிலில் ஒரே நாளில் 120 திருமணங்கள்

திருவந்திபுரம் கோவிலில் ஒரே நாளில் 120 திருமணங்கள்

திருவந்திபுரம் கோவிலில் ஒரே நாளில் 120 திருமணங்கள்


ADDED : பிப் 12, 2024 06:26 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : தை மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 120 திருமணங்கள் நடந்தன.

கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதப்பெருமாள் கோவில் ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இக்கோவிலில், திருமணம் செய்வோர் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. இக்கோவில் நடு நாட்டு திருப்பதி என்றும், இரண்டாவது திருப்பதி என்றும் அழைக்கப்படுகின்றது.

சுபமுகூர்த்த நாளில் கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் நுாற்றுக்கணக்கில் இங்கு வந்து திருமணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தை மாதம் கடைசி முகூர்த்த நாளான நேற்று திருவந்திபுரம் தேவநாதப்பெருமாள் சுவாமி கோவிலில், அதிகாலை 4:00 மணி முதல் திருமணங்கள் நடைபெற தொடங்கின. திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்று, கோவில் திருமண மண்டபத்தில் 95 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் 25 திருமணங்கள் என 120 திருமண நடந்தன.

இதனால், திருவந்திபுரம் பகுதியில் அணிவகுத்து நின்ற ஏராளமான வாகனங்களால், கடலுார்- பாலுார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us