ADDED : அக் 08, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்:மதுபாட்டில் விற்ற பெண் உட்பட, 2 பேரை போலீசார் கைது செய்தனர்
வடலுார் எஸ்.ஐ., ராஜராஜன் தலைமையிலான போலீசார் நேற்று தென்குத்து பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு இரண்டு நபர்கள் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது.
மதுபாட்டில் விற்ற தென்குத்து பகுதியை சேர்ந்த சமன்ஸ் மேரி, 63, என்ற மூதாட்டியையும், அதே பகுதியை சேர்ந்த கருணாமூர்த்தி, 27, என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 22 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.