/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ்சில் கஞ்சா கடத்தல் 2 பேர் கைது
/
பஸ்சில் கஞ்சா கடத்தல் 2 பேர் கைது
ADDED : நவ 23, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்திற்கு அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்றிரவு 11:30 மணிக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், சிதம்பரம், அண்ணாமலை நகரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ஸ்ரீராம்,24; நரசிங்க பெருமாள் மகன் சந்துரு,19; ஆகியோர் புதுச்சேரியில் இருந்து 4 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.உடன், இருவரையும் பிடித்து கடலுார், புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து புகார் செய்தனர். போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

