/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மத்திய சிறையில் 2 மொபைல் போன் பறிமுதல்
/
கடலுார் மத்திய சிறையில் 2 மொபைல் போன் பறிமுதல்
ADDED : அக் 25, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மத்திய சிறையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட 2 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது .
கடலுார் மத்திய சிறையில் கைதிகள் மொபைல்போன் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், கைதிகள் அறை மற்றும் சிறை வளாகம் முழுவதும் சிறைக்காவலர்கள் சோதனை நடத்தினர்.
இதில், தொகுதி எண் 7ன் கழிவறை அருகில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட 2 மொபைல்போன்கள், ஒரு சார்ஜரை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சிறை அலுவலர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, மொபைல்போன்கள் பதுக்கி வைத்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

