ADDED : ஏப் 05, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த ஜாவத்கான், 45; என்பவர் தனது பெட்டிக் கடையிலும், ராஜேந்திரபட்டிணம் வீரபாண்டியன், 40, என்பவர் தனது பெட்டிக் கடையிலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்றது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ஜாவத்கான், வீரபாண்டியன் ஆகியோரை கைது செய்து. குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.