ADDED : நவ 17, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே ஆடு திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கொஞ்சிக்குப்பம், ஐயனார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்,56; லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது, நள்ளிரவு 2:00 மணிக்கு அவரது வீட்டின் கொட்டகையிலிருந்து, ஆடு கத்தும் சத்தம் கேட்டது. குமார் மற்றும் அவரது மகன் குபேந்திரன் இருவரும் எழுந்து சென்று பார்த்தபோது, 2 பேர் அங்கிருந்து ஆடுகளை துாக்கிக்கொண்டு ஓடி மாயமாகினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து 17 வயது சிறுவன் மற்றும், பிரவீன்குமார்,32; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

