ADDED : ஆக 26, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சாத்தமாம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சாத்தமாம்பட்டு ராஜேஷ், 22; கீரப்பாளையம் முரளிதரன், 27; ஆராய்ச்சிக்குப்பம் தமிழ்வேந்தன், 21; ஆகிய 3 பேரையும் கைது செய்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.