/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சென்டர் மீடியனில் கார் மோதல் கடலுார் அருகே 5 பேர் காயம்
/
சென்டர் மீடியனில் கார் மோதல் கடலுார் அருகே 5 பேர் காயம்
சென்டர் மீடியனில் கார் மோதல் கடலுார் அருகே 5 பேர் காயம்
சென்டர் மீடியனில் கார் மோதல் கடலுார் அருகே 5 பேர் காயம்
ADDED : அக் 28, 2024 05:30 AM

கடலுார் : கடலுார் அருகே கார் சென்டர் மீடியனில் மோதியதில் 5 பேர் காயமடைந்தனர்.
சிதம்பரத்தில் இருந்து கடலுார் நோக்கி நேற்று மாருதி ஷிப்ட் டிசையர் கார் (டி.என்.82.டி.7363) வந்து கொண்டிருந்தது. காரை சீர்காழியைச் சேர்ந்த தனுஷ்குமார்,45; ஓட்டினார்.
கடலுார், முதுநகர் அடுத்த சங்கொலிக்குப்பம் அருகில் இரவு 8:30 மணிக்கு வந்த போது, கார் திடீரென சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதியது. இதில், காரின் முன்பகுதி சேதமானது. சத்தம் கேட்டு திடுக்கிட்ட அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரின் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த தனுஷ்குமார், உறவினர்கள் சரவணன் மனைவி காயத்ரி,28; இவரது மகள் ரித்திகா,12, மகன் ஆனந்த்,11; வைத்தியநாதன்,76; உட்பட 5 பேரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கடலுார், முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.