/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யில் பணியின்போது விபத்தில் தொழிலாளி சாவு
/
என்.எல்.சி.,யில் பணியின்போது விபத்தில் தொழிலாளி சாவு
என்.எல்.சி.,யில் பணியின்போது விபத்தில் தொழிலாளி சாவு
என்.எல்.சி.,யில் பணியின்போது விபத்தில் தொழிலாளி சாவு
ADDED : ஜன 26, 2024 05:28 AM

நெய்வேலி : என்.எல்.சி., இரண்டாம் அனல்மின் நிலையத்தில் பணியில் இருந்த தொழிலாளி ஹிட்டாச்சி இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்துள்ள நைனார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 60. என்.எல்.சி., இரண்டாம் அனல்மின் நிலைய எல்.எச்.எஸ்., பகுதியில் சொசைட்டி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை முதல் ஷிப்டு பணியில் இருந்தார்.
அங்கு அனல்மின் நிலைய பாய்லருக்கு நிலக்கரியை எடுத்து செல்லும் கன்வேயர் பெல்ட் அருகே ஹிட்டாச்சி இயந்திரம் மூலமாக நிலக்கரியை சமன் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஹிட்டாச்சி இயந்திரத்தின் அடியில் சிக்கிய சக்கரவர்த்தி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சக தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் செல்ல முற்பட்டனர்.
இதையறிந்த சக்கரவர்த்தியின் உறவினர்கள், விருத்தாசலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், பா.ம.க., மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வி.சி., கட்சியினர் ஆம்புலன்ஸ் செல்லும் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை, நெய்வேலி டி.எஸ்.பி., சபியுல்லா தலைமையிலான போலீசார், சமாதானப்படுத்தினர். என்.எல்.சி., மனிதவளத்துறை பொது மேலாளர் சிவராஜ் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறந்த சக்கரவர்த்தியின் மகனுக்கு நிரந்தர வேலை, குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்குவதாக நிர்வாகம் உறுதி அளித்தது. அதையடுத்து, சக்கரவர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த சக்கரவர்த்திக்கு அஞ்சம்மாள் என்ற மனைவி, செல்வக்குமார் என்ற மகன், செல்வராணி என்ற மகள் உள்ளனர்.

