sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாருக்கு கூடுதல் பஸ் சேவை; நடுவீரப்பட்டு மக்கள் கோரிக்கை

/

கடலுாருக்கு கூடுதல் பஸ் சேவை; நடுவீரப்பட்டு மக்கள் கோரிக்கை

கடலுாருக்கு கூடுதல் பஸ் சேவை; நடுவீரப்பட்டு மக்கள் கோரிக்கை

கடலுாருக்கு கூடுதல் பஸ் சேவை; நடுவீரப்பட்டு மக்கள் கோரிக்கை


ADDED : ஏப் 01, 2025 05:24 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு பகுதியில் காலை நேரத்தில் கடலுாருக்கு பஸ் போக்குவரத்து குறைவாக உள்ளதால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கடலுாருக்கு நடுவீரப்பட்டு வழியாக அரசு பஸ் தடம் எண் 15 இயக்கப்படுகிறது. இந்த பஸ் சாத்தமாம்பட்டிலிருந்து சிலம்பிநாதன்பேட்டை, பத்திரக்கோட்டை, நரியன்குப்பம் வழியாக நடுவீரப்பட்டுக்கு வந்து பாலுார் வழியாக கடலுார் செல்கிறது. இந்த பஸ்சில் தான் நடுவீரப்பட்டு சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் கடலுார்,புதுச்சேரி பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரிக்கு செல்கின்றனர். இவர்கள் நடுவீரப்பட்டுக்கு வந்து பஸ் ஏறி கடலுார் செல்கின்றனர்.

பஸ் நடுவீரப்பட்டு வருவதற்குள் முழுமையாக இடம் நிறைந்து விடுவதால், நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் பஸ்சில் ஏற இடம் இல்லாமல் தினமும் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நடுவீரப்பட்டிலிருந்து நேரடியாக கடலுாருக்கு கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us