sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வேளாண் அதிகாரி ஆய்வு

/

 வேளாண் அதிகாரி ஆய்வு

 வேளாண் அதிகாரி ஆய்வு

 வேளாண் அதிகாரி ஆய்வு


ADDED : நவ 21, 2025 05:33 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: நேரடி நெல் விதைப்பு செயல் விளக்க திடல்களை , வேளாண் துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

தேசிய உணவு பாதுகாப்பு மற்றும், ஊட்டச்சத்து இயக்கம் திட்டத்தின் கீழ், குறிஞ்சிப்பாடி வட்டா ரத்தில் நடப்பு ஆண்டின் சம்பா பருவத்தில், நேரடி நெல் விதைப்பு செயல் விளக்க திடல் அமைத்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படு கிறது.

இத்திட்டத்தின் கீழ், கீழூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள, செயல் விளக்க திடல்களை வேளாண் துணை இயக்குனர் அமிர்தராஜ் ஆய்வு செய்தார்.

திடல் அமைக்க மானியத்தில் தொகுப்பாக வழங்கப்பட்ட விதைகள், நுண்ணுாட்ட கலவை, உயிர் மற்றும் அங்கக உரங்கள், நானோ யூரியா, இலை வண்ண அட்டை ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மலர்வண்ணன், வேளாண் அலுவலர் வேல்முருகன், உதவி வேளாண் அலுவலர் சத்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர் கமலநாதன், பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் சுபாஷ் மற்றும், விவசாயிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us