ADDED : அக் 30, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்:  விருத்தாசலம் அருகே  மதுபாட்டில் விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலடி சப் - இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று பாலக்கொல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், 80;  என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, ராமலிங்கத்தை கைது செய்து,  அவரிடமிருந்து  மது  பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

