/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
/
வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
ADDED : ஜன 12, 2024 03:55 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு வேணுகோபால சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு கோமாதா பூஜையும் சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது.
பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
நேற்று அனுமன் ஜெயந்தி என்பதால் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்ததால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

