/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உத்திராபதியார் கோவிலில் 28ம் தேதி அமுது படையல்
/
உத்திராபதியார் கோவிலில் 28ம் தேதி அமுது படையல்
ADDED : ஏப் 26, 2025 05:36 AM
புதுச்சத்திரம் : சேந்திரக்கிள்ளை உத்திராபதியார் கோவிலில், வரும் 28ம் தேதி அமுது படையல் விழா நடக்கிறது.
புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை உத்திராபதியார் கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம் அமுதுபடையல் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா இன்று 26ம் தேதி துவங்குகிறது.
இதனை முன்னிட்டு இன்று மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, மாலை 6:00 மணிக்கு கொடியேற்றம் மற்றும் காவடி எடுக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சிநடக்கிறது.
வரும் 28ம் தேதி காலை 10:00 மணிக்கு உத்திரபதியாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, 11.00 மணிக்கு காவடி எடுத்தல், சுவாமி ஊர்வலம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சீராளன் கறி சமைத்து, அமுது படையல் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

