
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த தொழிற்கல்வி ஆசிரியர் உதயகுமாருக்கு பணி நிறைவு பாராட்டு விழா புவனகிரியில் நடந்தது.
அசோகன் வரவேற்றார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், வெங்கடாஜலபதி, வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், வசந்தவேல், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் ஞானமூர்த்தி, சரவணன் மற்றும் சண்முகவேல், பாரதி, பள்ளி தாளாளர் அன்பழகன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயராமன், கிரீடு தொண்டு நிறுவன இயக்குனர் நடனசபாபதி, துரைபாலச்சந்தர் வாழ்த்திப் பேசினார்.
பணி நிறைவு பெற்ற உதயகுமார் ஏற்புரையாற்றினார்.
பார்த்திபன் நன்றி கூறினார்.