/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு விழா
/
தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு விழா
ADDED : ஜன 28, 2025 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில், கடலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் மனிதநேயம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு வார விழா நடந்தது.
மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., ராமதாஸ் துவக்கி வைத்து தீண்டாமையை ஒழிக்க வேண்டியதன் அவசியம் பற்றி பேசினார்.
போதகர் செல்வராஜ், பாஷித் ரகுமான், நகரமன்ற துணைத்தலைவர் கிரிஜா, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் மணிவண்ணன், வி.சி., கட்சி நகர செயலாளர் திருமாறன், சமூக ஆர்வலர் முல்லைவேந்தன், ஆசிரியை வெற்றிச்செல்வி, இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ரவிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.