/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருச்சோபுரம் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி
/
திருச்சோபுரம் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி
ADDED : மார் 10, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், : புதுச்சத்திரம் அருகே திருச்சோபுரம், திருச்சோபுரநாதர் கோவிலில், மகாசிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
கோவிலில் 5வது ஆண்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10.00 மணிக்கு திருச்சோபுரநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
மாலை 6.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது. இரவு, கடலுார் சாரல் கலைக்கூடம் சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

