/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பீகார் பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை
/
பீகார் பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை
ADDED : மே 26, 2025 03:17 AM
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் மர்மமான முறையில் பீகார் பெண் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பீகார் மாநிலம், சமஸ்தீஸ்பூர், சித்துவாகியை சேர்ந்தவர் அரவிந்தகுமார். இவரது மனைவி லட்சுமிகுமாரி, 22; இருவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் 1 வயதில் பெண் குழந்தை, 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
விருத்தாசலம் பழமலைநாதர் நகர் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, கூலி வேலைக்கு சென்றனர். நேற்று காலை லட்சுமிகுமாரி வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த பக்கத்து வீட்டில் வசிப்போர் சென்று பார்த்தபோது, மனைவி உடல்நலக்குறைவு காரணமாக துாக்கத்திலேயே இறந்து விட்டதாக அரவிந்தகுமார் கூறியுள்ளார்.
தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார், லட்சுமிகுமாரி உடலை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விருத்தாசலம் டவுன் வி.ஏ.ஓ., குமார் அளித்த புகாரின் பேரில், சந்தேக மரணம் பிரிவின் கீழ் விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.