/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக்கிற்கு தீ வைப்பு: வி.ஏ.ஓ.,விற்கு வலை
/
பைக்கிற்கு தீ வைப்பு: வி.ஏ.ஓ.,விற்கு வலை
ADDED : பிப் 20, 2024 11:37 PM
கடலுார் : வீட்டு மனை பிரச்னையில் பைக்கிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வி.ஏ.ஓ.,வை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் செம்மங்குப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுந்தர்ராஜ். கடலுார் முதுநகர் வி.ஏ.ஓ., வாக உள்ளார். இவருக்கும், அவரது உறவினரான மோகன் மனைவி இந்திராவிற்கும் இடையே வீட்டுமனை பாகம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மோகன் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் மீது பெட்ரோல் ஊற்றி, வி.ஏ.ஓ., சுந்தர்ராஜ் தீ வைத்துள்ளார். இதில் பைக் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து இந்திரா கொடுத்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து வி.ஏ.ஓ., சுந்தர்ராஜை தேடி வருகின்றனர்.

