/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக்கில் சென்றவர் தவறி விழுந்து பலி
/
பைக்கில் சென்றவர் தவறி விழுந்து பலி
ADDED : அக் 22, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் தவறி விழுந்து இறந்தார்.
நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார், 57; இவர், தனது பைக்கில் கடந்த 19ம் தேதி விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். கடலுார், சாவடி, சோதனைச்சாவடி அருகில் வந்த போது, மாடு திடீரென குறுக்கே வந்ததால், திடீரென்று பிரேக் பிடித்தார். இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப ட்டது.
உடன், அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.