sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விபத்தில் சிறுவன் பலி 2 பேருக்கு தீவிர சிகிச்சை

/

விபத்தில் சிறுவன் பலி 2 பேருக்கு தீவிர சிகிச்சை

விபத்தில் சிறுவன் பலி 2 பேருக்கு தீவிர சிகிச்சை

விபத்தில் சிறுவன் பலி 2 பேருக்கு தீவிர சிகிச்சை


ADDED : அக் 03, 2025 05:44 AM

Google News

ADDED : அக் 03, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கடலுார் மாவட்டம், நாணமேடு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் உதயமாறன்,17. இவர் நேற்று முன்தினம் மாலை தனது உறவினரின் மகன் வினோத்குமார், 14; கவின், 24; ஆகிய இருவரையும் பல்சர் பைக்கில் அழைத்துக் கொண்டு மதிகிருஷ்ணாபுரம் - உச்சிமேடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அங்குள்ள சாராயக்கடை அருகே சென்றபோது சாலையோரம் இருந்த சிமென்ட் கட்டை மீது பைக் மோதியது. இதில், மூன்று பேரும் சாலையில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, உதயமாறன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வினோத்குமார், கவின் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us