sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆற்றில் குளித்த சிறுவன் மாயம்; தேடும் பணி தீவிரம் 

/

ஆற்றில் குளித்த சிறுவன் மாயம்; தேடும் பணி தீவிரம் 

ஆற்றில் குளித்த சிறுவன் மாயம்; தேடும் பணி தீவிரம் 

ஆற்றில் குளித்த சிறுவன் மாயம்; தேடும் பணி தீவிரம் 


ADDED : டிச 23, 2024 05:07 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே ஆற்றில் குளித்த சிறுவன் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த மோசட்டை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் சந்திரசேகர், 10. அதேபகுதியில் உள்ள அரசு துவக்க பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று பகல் 1:00 மணியளவில் தனது தாய் சரஸ்வதியுடன், சந்திரசேகர் அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது, ஆற்றில் குளித்த சிறுவன் சந்திரசேகர் திடீரென மாயமானார்.

தகவலறிந்து சென்ற விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் நேற்று பகல் 2:00 மணியில் இருந்து சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆனால் அவர் கிடைக்கவில்லை. ஆற்றில் குளித்த சிறுவன் திடீரென மாயமானதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சிறுவன் மாயமானது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us