/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழை நீர் சேகரிப்பு மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?
/
மழை நீர் சேகரிப்பு மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?
ADDED : நவ 02, 2024 07:06 AM
மந்தாரக்குப்பம், : மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மூலம் மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீர்மட்டம் சரியாமல் பாதுகாக்கலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்மாபுரம் ஒன்றியம் பகுதி அலுவலகம் மற்றும் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டன. மேலும் பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மழை நீர் சேகரிப்பு தற்போது வெறும் காட்சி பொருளாக உள்ளது. எனவே பருவ மழை துவங்கியுள்ளதால் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.