ADDED : ஆக 10, 2025 02:36 AM

அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு : பரதுார் செல்லியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுார் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கடந்த 6ம் தேதி தேர்த் திருவிழா நடந்தது.
நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
