நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் சிவ சுப்ரமணியர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது
பெண்ணாடம், கிழக்கு மெயின்ரோட்டில் உள்ள சிவ சுப்ரமணியர் கோவிலில் ஆடி மாதத்தையொட்டி சுவாமிக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
கோவில் வளாகத்தில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.