sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாய், மகனை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

/

தாய், மகனை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

தாய், மகனை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

தாய், மகனை தாக்கிய 5 பேர் மீது வழக்கு


ADDED : நவ 01, 2025 02:29 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சிலம்பிநாதன்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவரது அண்ணன் அருள்மணிமுத்து, 30; டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.

அருள்மணிமுத்து கடந்த ஆண்டு கடலுார் அடுத்த கே.என்.பேட்டையில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சாலை விபத்தில் அருள்மணிமுத்து காயமடைந்ததால் தவணை தொகையை கட்ட முடியவில்லை.

கடந்த மாதம் 24ம் தேதி நிதிநிறுவன ஊழியர்கள் ஜெகன்நாதன், சுந்தர், வெங்கடேசன், ராமமூர்த்தி, தனஞ்செயன் ஆகிய 5 பேரும் அருள்மணிமுத்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பணத்தை கேட்டு தாக்கினர். தடுத்த அருள்மணிமுத்துவின் தாய் தேவகியையும் தாக்கினர்.

வெற்றிச்செல்வன் அளித்த புகாரின் பேரில், ஜெகன்நாதன், சுந்தர், உட்பட 5 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us