/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருதரப்பு மோதல் 6 பேர் மீது வழக்கு
/
இருதரப்பு மோதல் 6 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 27, 2025 08:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: இருதரப்பு மோதல் தொடர்பாக, 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்
குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டையைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் தினேஷ்,19; இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்த முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பாட்டுக் கச்சேரி பார்க்க சென்றார்.
அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த, அஜித்குமார் என்பவருக்கும், தினேஷிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருதரப்பும் தாக்கிக் கொண்டனர். இருதரப்பு புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார், அஜித் குமார், சஞ்சய், தினேஷ் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.