/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாட்டியை வெட்டிய பேரன் மீது வழக்கு
/
பாட்டியை வெட்டிய பேரன் மீது வழக்கு
ADDED : நவ 07, 2025 12:45 AM
குறிஞ்சிப்பாடி: பாட்டியை கத்தியால் வெட்டி, தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த எல்லப்பன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வகணபதி, 43; இவரது மகன் சிவபாரத், 25; நேற்று முன்தினம் தந்தையிடம் பணம் தொடர்பாக பேசிய சிவபாரத், குடிபோதையில் அவரை ஆபாசமாக திட்டி, இரும்பு கத்தியால் வெட்ட முயன்றார். இதனை தடுக்க சென்ற செல்வகணபதியின் தாய் சின்ன பாப்பா, 65; என்பவருக்கு தலையில் கத்தி வெட்டு விழுந்தது.
இதையடுத்து அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த சிவபாரத் அங்கிருந்து தப்பினார்.
சம்பவம் குறித்து செல்வகணபதி குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார்.
சிவபாரத் மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

