sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ... ஆய்வு;   ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

/

நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ... ஆய்வு;   ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ... ஆய்வு;   ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ... ஆய்வு;   ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை


ADDED : அக் 29, 2025 07:18 AM

Google News

ADDED : அக் 29, 2025 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட வருகை தந்த மத்திய குழுவினரிடம் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

கடலுார் மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை கடலுார், குண்டியமல்லுார், புவனகிரி, விருத்தாசலம் பகுதியில் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை கடந்த 16ம் தேதி முதல் துவங்கியது. இதனால் நெல்லில் ஈரப்பதம் அதிகரித்தது.

பொதுவாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்து வந்தனர். கூடுதலாக ஈரப்பதம் இருந்தால் விவசாயிகள் நெல்லை உலர்த்தி விற்பனை செய்ய வேண்டியிருந்தது.

அதையொட்டி தற்போது மழைக்காலமாக இருந்ததால் நெல் அறுவடை செய்யும்போதே 19 சதவீதம் ஈரப்பதம் இருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது மழைக்காலத்தில் விவசாயிகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எனவே கொள்முதல் செய்யப்படும் நெல்லில் உள்ள ஈரப்பதத்தை 17 லிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 3 குழுக்களை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது. அதில் ஒரு குழு நேற்று கடலுார் மாவட்டத்திற்கு வருகை தந்தது. இந்த குழுவில் பிரீத்திபிரியா பட், அனுப்பமா, அருண் பிரசாத் மற்றும் தமிழக அரசு சார்பில் உமா மகேஸ்வரி ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

கடலுார் மாவட்டத்தில் குறுவை சீசன் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளதால் பெரும்பாலன கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் சில கொள்முதல் நிலையங்களே செயல்பட்டு வருகின்றன.

கடலுார் அருகே துாக்கணாம்பாக்கம், குண்டியமல்லுார், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ள ஈரப்பதம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

நெல்லை உலர்த்துவதற்கு போதிய இடவசதி உள்ளதா, மழை வந்தால் தார்பாய் போட்டு மூட வாய்ப்புள்ளதா என விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் மழையில் நனைந்து வைத்திருந்த நெல்லை அவர்கள் மாதிரிக்காக சேகரித்து வைத்து இருந்தனர்.

ஆய்வின்போது கடலுார் கோட்டாட்சியர் சுந்தர்ராஜன், தாசில்தார் மகேஷ், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us