/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சண்டிகா பரமேஸ்வரி கோவிலில் சித்ரா பவுர்ணமி
/
சண்டிகா பரமேஸ்வரி கோவிலில் சித்ரா பவுர்ணமி
ADDED : மே 10, 2025 12:24 AM
கடலுார்: பச்சையாங்குப்பம் சண்டிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா இன்று துவங்குகிறது.
கடலுார், பச்சையாங்குப்பம் சண்டிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா இன்று (10ம் தேதி) அதிகாலை 4:30 மணி முதல், 6:00 மணி வரை கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.
வரும் 12ம் தேதி காலை 6:00 மணி முதல், 10:30 மணி வரை குளக்கரை சென்று சக்தி கரகம் ஜோடித்து 108 பால்குடம் எடுத்து வந்து அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது.
மதியம் 12:00 மணிக்கு சிறப்பு ேஹாமம், யாக சாலை வேள்வி, மாலை 6:00 மணிக்கு தாய் வீட்டு சீதனம் எடுத்து வருதல், இரவு 7:00 மணிக்கு அம்மன் சுயரூபம் கொண்டு தீச்சட்டி ஏந்தி வருதல் நடக்கிறது.
13ம் தேதி மாலை 6:00 மணிக்கு சாந்தி பூஜை, 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு காப்பு களைத்தல், மஞ்சள் நீராட்டு விழா, சந்தனகாப்புடன் தீபாராதனை, 7:00 மணிக்கு உதிரவாய் துடைத்தல் நடக்கிறது.