sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனுக்கள் மீது நடவடிக்கை கலெக்டர் அறிவுரை  

/

மனுக்கள் மீது நடவடிக்கை கலெக்டர் அறிவுரை  

மனுக்கள் மீது நடவடிக்கை கலெக்டர் அறிவுரை  

மனுக்கள் மீது நடவடிக்கை கலெக்டர் அறிவுரை  


ADDED : ஜூலை 21, 2025 05:18 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின், அவர் பேசுகையில், தமிழக அரசு சார்பில் பொதுமக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டங்களின் பயன்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார வேறுபாடின்றி கிடைக்கும் வகையில், திங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம், நுகர்வோர் குறைதீர் முகாம், முன்னாள் ராணுவத்தினர்களுக்கான குறைதீர் முகாம், ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் முகாம் என, பல்வேறு முகாம்களில் ஏராளமான மனுக்கள் பெறப்படுகின்றன.

பெறப்பட்ட மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.






      Dinamalar
      Follow us