ADDED : நவ 14, 2025 11:31 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் ஊராட்சியில், நெய்வேலி என்.எல்.சி., நிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய சமுதாய நலக்கூட கட்டடம் திறப்பு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு, வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி கட்டடத்தை திறந்து, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் கலெக்டர் பிரியங்கா, என்.எல்.சி., நிறுவன துணை மேலாளர் ஞானப்பழம், துணை முதன்மை பொறியாளர் முரளிதரன், தாசில்தார் அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'தமிழகத்தில் இதுவரை மகளிர் உரிமை தொகை 1 கோடியே 15 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டுள்ள மகளிர் தொகையும் வரும் டிசம்பர் மாதம் 15 ம் தேதி வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
முதியவர்கள், பெண்கள், கல்லுாரி மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன,' என்றார்.
ஒன்றிய செயலாளர் மதியழகன், தங்க ஆனந்தன், பாண்டியன், நகரசெயலாளர் பழனிமனோகரன், மகளிரணி மலர்விழி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருளரசி, ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் ரமேஷ், அன்பு, நல்லதம்பி, ஏழுமலை, கொளஞ்சி, சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

