/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திறனறி தேர்வில் வென்ற மாணவிக்கு பாராட்டு
/
திறனறி தேர்வில் வென்ற மாணவிக்கு பாராட்டு
ADDED : நவ 27, 2025 04:48 AM

பெண்ணாடம்: திறனறி தேர்வில் வென்ற, பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியை ஆசிரியர்கள் பாராட்டினர்.
தமிழக அரசு சார்பில், பள்ளி கல்வித்துறை நடத்திய 'தமிழ் திறனறி தேர்வு - 2025' தேர்வில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பலர் திறனறி தேர்வில் பங்கேற்றனர். அதில், மாணவி சங்கவி என்பவர், மாநில அளவில் தேர்ச்சி பெற்றார். அவரை தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வெங்கடேசன் பாராட்டி பரிசு மற்றும் ரொக்கம் வழங்கினார்.
உதவி தலைமை ஆசிரியை காமாட்சி அம்மாள், ஆசிரியைகள் காயத்ரி, கலைச்செல்வி, உமா, மஞ்சுளா உட்பட பலர் பங்கேற்றனர். தமிழாசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

