ADDED : நவ 15, 2025 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருணகிரி மற்றும் போலீசார் நேற்று டி.மாவிடந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, முகமது நஜீர், 57; மற்றும் அவரது மனைவி பைசுன்பீ, 46; ஆகியோர் தங்களது பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

