ADDED : பிப் 20, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் ஆதிபராசக்தி மன்றத்தில் உலக நன்மைக்காக கோடி அர்ச்சனை சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆதிபராசக்தி மன்ற முன்னாள் மாவட்ட செயலாளர் உத்திராபதி தலைமை தாங்கினார். அள்ளூர் மன்ற தலைவர் பொன்மொழி ஒருங்கிணைத்தார். மன்ற உறுப்பினர்கள் தேவி, செல்வி, ஆண்டாள், சீமாதிபதி, ராதாகிருஷ்ணன், ஆனந்தி, மதுமிதா, கோமகள்தேவி, லாவண்யா முன்னிலை வகித்தனர்.
உலக நன்மை பெற வேண்டி ஆன்மிக சொற்பொழிவு, செவ்வடை அணிந்த பெண்கள் கோடி அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

