/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல்
/
கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல்
கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல்
கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல்
ADDED : செப் 26, 2011 10:34 PM
கடலூர் : கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் முன்னிலையில் மனு தாக்கல் செய்தார்.
கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளராக தற்போதைய நகர செயலர் குமரன் பெயர் அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் திடீரென வேட்பாளர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கடலூர் தொகுதி செயலர் சுப்ரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத் தலைமையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா துரை சிலைக்கு வேட்பாளர் சுப்ரமணியன் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் சம்பத் முன்னிலையில் தேர்தல் அலுவலர் இளங்கோவனிடம் வேட்பாளர் சுப்ரமணியன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாவட்ட துணைச் செயலர் முருகுமணி, மருத்துவரமணி சீனுவாச ராஜா, விவசாய அணி காசிநாதன், தொழிலாளர் அணி பாலகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் குமார், தொகுதி இணைச் செயலர் பாலகிருஷ்ணன், மீனவரணி தங்கமணி, ஒன்றிய செயலர் முத்துகுமரசாமி, ஆறுமுகம், இளைஞரணி கார்த்திக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பண்ருட்டி: நகராட்சி சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் பன்னீர்செல்வம் நேற்று மனு தாக்கல் செய்தார்.
பண்ருட்டி நகராட்சித் தேர்தலில் சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் பன்னீர்செல்வம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத் முன்னிலையில் தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரி திருநாவுக்கரசுவிடம் மனு தாக்கல் செய்தார்.பன்னீர்செல்வத்திற்கு மாற்று வேட்பாளராக சத்யா மனு தாக்கல் செய்துள்ளார்.