sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சணல் பொருள் தயாரிப்பு குறித்து சுய உதவிக்குழு பெண்களுக்கு பயிற்சி

/

சணல் பொருள் தயாரிப்பு குறித்து சுய உதவிக்குழு பெண்களுக்கு பயிற்சி

சணல் பொருள் தயாரிப்பு குறித்து சுய உதவிக்குழு பெண்களுக்கு பயிற்சி

சணல் பொருள் தயாரிப்பு குறித்து சுய உதவிக்குழு பெண்களுக்கு பயிற்சி


ADDED : ஆக 07, 2011 01:43 AM

Google News

ADDED : ஆக 07, 2011 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : சுய உதவிக் குழு பெண்களுக்கு சணல் பொருள் தயாரிப்பது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் கடலூரில் நடந்தது.தேசிய சணல் வாரியம், கோவை ஜோதி கன்னிகா யுனிவர்சல் சர்வீஸ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையம் இணைந்து சணல் பொருள் தயாரிப்பது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் கடலூர் டவுன்ஹாலில் நடந்தது.

சணல் சேவை மைய செயலர் பொன்னரசு வரவேற்றார்.திட்ட அலுவலர் ராமசாமி பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார்.

கலெக்டர் அமுதவல்லி முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:சுற்றுச் சூழலை பாதுகாத்திட பாலிதின் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக சணல் பொருட்களை பயன்படுத்தலாம். சணல் முற்றிலுமாக மக்கக் கூடியது. இதனால் சணல் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.அதனையொட்டி சணலை கொண்டு பை, வீட்டு உபயோக அலங்காரப் பொருட்கள் தயாரிக்க சுய உதவிக்குழு பெண்களுக்கு இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.ஒருநாள் பயிற்சியில் பங்கேற்றுள்ள பெண்களில் 30 பேரை தேர்வு செய்து 21 நாள் அடிப்படை பயிற்சி, 14 நாள் உயர்நிலைப் பயிற்சி, 7 நாள் வடிவமைப்பு பயிற்சி இறுதியாக செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சியை பயன்படுத்திக் கொண்டு பெண்கள், சணல் பொருட்களை தயாரித்து தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதோடு, சமுதாயத்தின் சுற்றுச் சூழலை பாதுகாக்க முன் வர வேண்டும்.இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி பேசினார்.விழாவில், நபார்டு உதவி பொது மேலாளர் ராஜகோபாலன், முன்னோடி வங்கி கிருஷ்ணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மகாலிங்கம், மகளிர் திட்ட அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பேசினர். சிவக்குமார் நன்றி கூறினார்.அதனைத் தொடர்ந்து சுய உதவிக் குழு பெண்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது.










      Dinamalar
      Follow us