/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கபடியில் சாதித்து வரும் கடலுார் மாவட்ட வீரர்கள்; மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டு
/
கபடியில் சாதித்து வரும் கடலுார் மாவட்ட வீரர்கள்; மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டு
கபடியில் சாதித்து வரும் கடலுார் மாவட்ட வீரர்கள்; மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டு
கபடியில் சாதித்து வரும் கடலுார் மாவட்ட வீரர்கள்; மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டு
ADDED : ஜூன் 11, 2025 07:51 PM

கடலுார்; கடலுார் மாவட்டத்தில், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்த வீரர், வீராங்கனைகளை மாவட்ட விளையாட்டுஅலுவலர் பாராட்டினார்.
கடலுார் மாவட்ட ஆண்கள் அணியினர், 2025ம் ஆண்டிற்கான ஜீனியர் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றனர். கடந்த மார்ச் மாதம், பீகாரில் நடந்த 34வது தேசிய சப் ஜீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவி அனுப்பிரியா, தமிழக அணியில் இடம்பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.
கடலுார் ஒதியடிக்குப்பத்தைச் சேர்ந்த சபிதா, பீகாரில் நடந்த கேலோ இந்தியா இளையோர் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றார்.
ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினத்தில் நடக்கும் தேசிய பீச் கபடி போட்டியில் கடலுார் உண்ணாமலை செட்டி சாவடியைச் சேர்ந்த அஸ்வினி, தமிழக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
வரும் 28ம் தேதி, இந்திய கபடி பெடரேஷன் சார்பில் உத்ரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடக்கும் 18வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சிறுவர், சிறுமியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணி சார்பில் பெண்கள் பிரிவில் அனுப்பிரியா, கவிதா, ஆண்கள் பிரிவில் கிள்ளை எம்.ஜி.ஆர்.,நகரைச் சேர்ந்த சக்திவேல் பங்கேற்கின்றனர்.
கடலுார் மாவட்டத்தில் மாவட்ட கபடி கழக பொறுப்பாளர்கள் வேலவன் நவநீதராமன், மணிபால் மற்றும் நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர் புஷ்பராஜ், பயிற்சியாளர் நாகராஜ், என்.எல்.சி.,கபடி பயிற்சியாளர் ரவிச்சந்திரன், புரோ கபடி வீரர் ஜவகர், தேசிய விளையாட்டு வீரர்கள் ஞானமுருகன், குணசேகர், புஷ்பராஜ், கோபு, தபால்துறை கபடி வீரர் மணிகண்டன் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பயிற்சியும், ஆலோசனையும் வழங்குகின்றனர். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் மற்றும் மாவட்ட கபடி கழக செயலாளர் நடராஜன் ஆகியோர் பாராட்டினர்.