ADDED : ஏப் 06, 2025 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகள் ஆனந்த்நித்யா, 22; இவர் கடந்த மாதம் 27 ம் தேதி, விருத்தாசலம் சென்று வருவதாக கூறி, வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தாய் ஆனந்தி அளித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, ஆனந்த் நித்யாவை தேடி வருகின்றனர்.