ADDED : ஆக 04, 2025 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த நரியங்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,65; அதே பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இருவருக்கும் பூர்வீக நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தேவேந்திரன், கிருஷ்ணமூர்த்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், தேவேந்திரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.