ADDED : பிப் 16, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் மயங்கி விழுந்து இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து, 60; இவர், கடந்த 12ம் தேதி வீட்டிலிருந்து வெளியேசென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில்நேற்று முன்தினம் காலை திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் மயங்கிக் கிடந்தவரை, அங்கிருந்தவர்கள் மீட்டுகடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே பிச்சைமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.