/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
/
'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
ADDED : நவ 27, 2025 04:51 AM

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலேஸ்வர் மேல்நிலைப்பள்ளியில் புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்திய, பதில் சொல், பரிசு வெல் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் வினாடி வினா போட்டி நடத்தியது.
பள்ளி தலைமை ஆசிரியர் இமயவரம்பன் தலைமை தாங்கினார். போட்டியில் தேர்வான 16 மாணவிகள், 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு தகுதிச்சுற்று நடந்தது.
போட்டியின் இறுதியில் பிளஸ் 2 மாணவர் ரத்தினவேல், பிளஸ் 1 மாணவர் பிரதாப் முதலிடமும், 6 ம்வகுப்பு மாணவி அஷ்மிந்தா, மாணவர் ரித்திக் இரண்டாமிடமும் பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இமயவரம்பன் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார்.
ஆசிரியர்கள் குமாரி, கார்த்திகேயன் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வினாடி வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி அளவில் வெற்றிபெற்ற இரு அணிளும் மெகா வினாடிவினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.

