/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
/
'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
ADDED : டிச 11, 2025 05:50 AM

கடலுார்: தினமலர்-பட்டம் இதழ், வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து கடலுார் மேற்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வினாடி வினா போட்டி நடத்தியது.
பள்ளி தலைமை ஆசிரியர் எல்லப்பன் தலைமை தாங்கினார். போட்டியில் தேர்வான, 16 மாணவர்கள், 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு தகுதிச்சுற்று நடந்தது.
போட்டியின் இறுதியில், 8 ம் வகுப்பு மாணவி ஹரிணி, 9 ம் வகுப்பு மாணவி கோமதி முதலிடமும், 9 ம் வகுப்பு மாணவர் கபில் க்ரஷ், 6ம்வகுப்பு மாணவர் சந்தோஷ் இரண்டாமிடமும் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோஷியல் வெல்ஃபேர் பவுண்டேஷன் நிறுவனர் மிலிட்டரி பாபு சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார்.
தொண்டு நிறுவன இயக்குனர் சக்குபாய், கடலுார் வருமான வரித்துறை அலுவலக கண்காணிப்பாளர் அரவிந்த், உதவி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி, ஆசிரியர்கள் மணிமாறன், பிரதீப் உட்பட பலர் பங்கேற்றனர்.
வினாடி வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பள்ளி அளவில் வெற்றி பெற்ற இரு அணிகளும் மெகா வினாடிவினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.

