/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'தினமலர்--பட்டம்' வினாடி வினா போட்டி
/
'தினமலர்--பட்டம்' வினாடி வினா போட்டி
ADDED : நவ 27, 2025 04:52 AM

கடலுார்: கடலுார், துறைமுகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதுச்சேரி தினமலர் பட்டம் இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்திய பதில் சொல், பரிசு வெல் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து கடலுார் துறைமுகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வினாடி வினா போட்டி நடத்தியது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கினார். போட்டியில் தேர்வான 16 மாணவிகள், 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு தகுதிச்சுற்று நடந்தது. போட்டியின் இறுதியில் பிளஸ் 2 மாணவிகள் விஜயஹாசினி, தங்கம் முதலிடமும், பிளஸ் 2 மாணவிகள் ராஜலட்சுமி, விஜிதா இரண்டாமிடமும் பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கு குருதேவ் ஜூவல்லரி உரிமையாளர் சந்திரகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி ஆகியோர் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினர்.
ஆசிரியர் பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வினாடி வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி அளவில் வெற்றிபெற்ற இரு அணிளும் மெகா வினாடிவினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.

