/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட கூடைப்பந்து அணி வீரர்கள் தேர்வு
/
மாவட்ட கூடைப்பந்து அணி வீரர்கள் தேர்வு
ADDED : ஜூலை 29, 2025 07:17 AM

கடலுார் : கடலுாரில் மாநில அளவிலான சப் ஜூனியர் கூடைப்பந்து போட்டிக்கு, கடலுார் மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
திருச்சி அடுத்த தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் மாநில அளவில் 13வயதிற்கு உட்பட்ட சப் ஜூனியர், கூடைப்பந்து போட்டி நடக்கிறது. அதில் பங்கேற்பதற்கான கடலுார் மாவட்ட அணி வீரர்கள் தேர்வு கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.
கடலுார் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக செயலாளர் விஜயசுந்தரம், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சிலபாலசங்கரன், சபாரத்தினம் மற்றும் அப்துல்லா ஆகியோர் பங்கேற்று அணி வீரர்களை தேர்வு செய்தனர்.
சங்க நிர்வாகி செல்வராஜ், உடற்பயிற்சியாளர்கள் வடிவேல்முருகன், பாலாஜி, இளவரசன், ரகுராம், சிவக்குமார், ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.